எச்.பி.சி.எல்: காலியிடங்கள்… மாதம் 1,60,000 வரை ஊதியம்!

1 Min Read

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது, இந்நிறுவனத்தில் 269க்கும் மேற்பட்ட ஆபீசர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியாளர் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / சிவில் / கெமிக்கல்): இந்த பிரிவுகளில் 98, 35, 16, 26 காலியிடங்கள் உள்ளன.

மாதம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000/- வரை ஊதியம். தொடர்புடைய துறையில் 4 ஆண்டு முழுநேர பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 25-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இது ஒன்றிய அரசு வேலை என்பதால், நாடு முழுவதிலுமிருந்து தகுதியான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூன் 1, 2025 அன்று தொடங்கி, ஜூன் 30, 2025 அன்று முடிவடைகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *