11 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த தவறுகள்: காங். தலைவர் கார்கே கடும் தாக்கு!

1 Min Read

கல்புர்கி, ஜூன் 12  தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது:

‘‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகள் நடந்துள்ளன. இத்தனை பொய் கூறும், இவ்வளவு தவறுகளை செய்யும், மக்களை சிக்க வைக்கும், இளைஞர்களை ஏமாற்றும், ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது. நான் 55 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன்.

65 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியைப் போல ஒருவரை நான் பார்த்தது கிடையாது. பிரதமர் எல்லாவற்றுக்கும் பொய் கூறுகிறார். அவர் கூறும் எதையும் அவர் செயல்படுத்துவது இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவரிடம் எந்த பதிலும் இல்லை. பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை என பல விசயங்கள் உள்ளன. ஆனால் மக்களிடம் பொய் சொன்னதாகவும், தவறு செய்ததாகவும் அவர் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் ஒன்றன்பின் ஒன்றாக பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *