தமிழர் கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி

Viduthalai
3 Min Read

பயிற்சி முடிந்தவுடன் உடனே அரசு கோயிலில் பணிவாய்ப்பு!

தமிழ்நாடு

சென்னை, ஜூன் 24– அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி தருகின்ற பள்ளிகளில் சேர்ந்து படிப்பது குறித்து தமிழ்நாடு அர்ச் சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அரசு நியமன அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் வா.ரங்க நாதன் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:

தமிழ்நாட்டில் நிறுவனமயமாக் கப்பட்ட கோவில்களில், அர்ச்சகர் பணி நியமனம் என்பது எல்லோ ராலும் பெறக்கூடிய ஒன்றல்ல. அந்தந்தக் கோவில்களில் வழி வழியாக அர்ச்சனை செய்துவந்த வர்களே இந்தப் பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். எல்லா ஹிந்து ஜாதியினரும் கோவில்களில் கடவுள் சிலைகளைத் தொட்டு பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், 1970களின் துவக்கத்தில் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தார் தந்தை பெரியார்.

இதையடுத்து, இதற்காக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தை இயற்றினார் அப்போ தைய முதலமைச்சர் கலைஞர் இதற்குப் பிறகு, பல தடைகளைத் தாண்டி 2006ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற அரசாணை  பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற தடையால் நியமனம் நடக்கவில்லை.

2021இல் கோயில் கருவறைக் குள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக பணியில் அமர்த்தி ஆலயங்களில் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தி னார் திராவிட நாயகன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

 அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம் இணைந்து மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசால் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின் றன.

சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம், சிறீபெரும் புதூர் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள் ளிகளும், மதுரை, திருவண்ணா மலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக் கான பயிற்சிப் பள்ளிகளும் திறம் பட செயல்பட்டு வருகின்றன. இவற் றில் சேர தகுதிகள் எளிதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி பள்ளியில் பாடத் திட்டங்கள் தமிழ் முறைப்படி மற்றும் சமஸ்கிருத முறைப்படியும்  அனைத்து விதமான பாடத் திட்டங்களும் இதில் நடத்தப்பட உள்ளன.

சேர தகுதிகள்:

ஹிந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 14 வயது முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ. 3,000/உதவித் தொகை வழங்கப்படும்

ஓராண்டு இலவச பயிற்சி

அமைவிடங்கள் மற்றும் விவரங்களுக்கு :

மதுரை மாவட்டம், மதுரை,

அருள்மிகு மீனாட்சி சுந்த ரேசுவர் திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),

தொடர்பிற்கு – 04522344360, 9788171170

திருவண்ணாமலை மாவட்டம்,

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்), தொடர்பிற்கு – 04175 252438, 6379149192

தூத்துக்குடி மாவட்டம்,

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),

தொடர்பிற்கு – 04639242221, 9442053394

திண்டுக்கல் மாவட்டம்,

பழனி, அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமி திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்)

தொடர்பிற்கு – 04545242236, 7010845219

சென்னை மாவட்டம்,

திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),

தொடர்பிற்கு – 04428442462, 7305633101

திருச்சி மாவட்டம்,

சிறீரங்கம், அருள்மிகு அரங்கா நாத சுவாமி திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),

தொடர்பிற்கு – 04312432246, 9443398769

திருவள்ளூர் மாவட்டம்,

சிறீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)

தொடர்பிற்கு- 04427162236, 9444854650

Website : <https://hrce.tn.gov.in>

சிறுவயதில் இருந்தே கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று விருப்பப்பட்ட மாணவர் களுக்கு தற்போது துவங்கப்பட் டுள்ள பயிற்சிப் பள்ளி மாபெரும் வாய்ப்பு என அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோயில் கரு வறையில் தமிழனும் தமிழும் பாலின பாகுபாடு இன்றி அனை வரும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இது. இந்த பயிற்சி பள்ளியில் ஆண்களும் பெண்களும் அனைவரும் இணைந்து படிக்க அரிய வாய்ப் பாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *