ஜூன் 12இல் மேட்டூர் அணையை திறக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

சேலம், ஜூன் 8- மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்கு திறக்கப்படஉள் ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து பாசனத் துக்காக தண்ணீர் திறக்கப் பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலி ருந்து டெல்டா பாசனத் துக்கு ஜுன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி  மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பராமரிப்புப் பணி

டெல்டா மாவட்டங் களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள  மேட்டூர் அணை ரூ 20 கோடி ரூபாய் செலவில்  பரா மரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறுசிறு சேதங்களை சரிசெய்யும் பணியுடன், அணை  பராமரிப்பு, புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதை மாவட்டஆட்சியர், நீர்வளத்துறை ஆணையர் பல உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அணை திறப்பு

இந்த நிலையில்,  பாசனத்துக்காக அணை யில் இருந்து, ஜூன் 12ஆம் தேதி  தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

120 கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 113.41 அடி நீர் உள்ளது. இந்த நிலையில் கருநாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கமேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை  தாண்டியுள்ளது.  தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.  குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *