கரோனா எச்சரிக்கை நாடு முழுவதும் 5,364 பேருக்கு கரோனா தொற்று உறுதி

1 Min Read

புதுடில்லி, ஜூன்8- நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன் றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 498 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நோய்த் தொற் றால் உலகமெங்கும் தற்போது புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழு வதும் கடந்த (ஒரு நாளில்) 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை அய்யாயிரத்தை கடந்து 5,364 என்ற எண்ணிக்கையில் பதிவாகி யுள்ளது. நேற்று (7.6.2025) ஒரே நாளில் மட்டும் கரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை 221 பேர் மருத்துவச் சிகிச் சையில் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *