நடிப்பு என்பது கலையிலே சேர்ந்த ஒன்றாகும். இதன் மூலம் மக்கள் அனுபவிக்கிற சுவை ஒன்றா? இரண்டா? பாட்டு, நாட்டியம், இலக்கியம் இவைகளால் அனுபவிக்கிற சுவை அப்படிப்பட்டதாகுமா? இவைகள் தனித் தனியானவையே. அவை நம் நாட்டிலே வெறும் கலையோடு கரைந்து போய்விடுகின்றன. அதனால் மக்கள் அனுபவிப்பது என்ன? பயன் என்ன? நம் நாட்டில் இன்றைக்கு இருக்கின்ற கலைகளில் மக்களுக்குத் தேவையான சங்கதிகள் என ஏதாகிலும் இருக்கின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’