தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படம் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (ஜூன் 6, 1965)
ஜாதி ஒழிப்பிற்கு தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படம் எரிப்புப் போராட்டம் 65 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நாள் இன்று (6.06.1960)
‘‘இராவண பெரியார்’’ எழுதிய
மு.சி.பூரணலிங்கம் பிள்ளையின் நினைவு நாள் இன்று (ஜூன் 6, 1947)
‘‘இராவண பெரியார்’’ எழுதிய முன்னீர்பள்ளம் சிவசுப்பிரமணியம் பூரணலிங்கம் பிள்ளை (25 மே 1866 – 6 சூன் 1947) என்பவர் தமிழறிஞர், கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். 1938-1939 ஆண்டுகளில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்களுடன் இணைந்து இவரும் போராடினார்
இவர் ஆங்கிலத்தில் 32 நூல்களையும், தமிழில் 18 நூல்களையும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். பூரணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.