இந்நாள் – அந்நாள்!

1 Min Read

தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படம் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (ஜூன் 6, 1965)

ஜாதி ஒழிப்பிற்கு தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படம் எரிப்புப் போராட்டம் 65 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நாள் இன்று (6.06.1960)

‘‘இராவண பெரியார்’’ எழுதிய
மு.சி.பூரணலிங்கம் பிள்ளையின் நினைவு நாள் இன்று (ஜூன் 6, 1947)

‘‘இராவண பெரியார்’’ எழுதிய  முன்னீர்பள்ளம் சிவசுப்பிரமணியம் பூரணலிங்கம் பிள்ளை (25 மே 1866 – 6 சூன் 1947) என்பவர் தமிழறிஞர், கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். 1938-1939 ஆண்டுகளில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்களுடன் இணைந்து இவரும் போராடினார்

இவர் ஆங்கிலத்தில் 32 நூல்களையும், தமிழில் 18 நூல்களையும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.  பூரணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *