பாட்னா, ஜூன் 3– பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தின் ஜெய்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியன்று 8 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமி சத்தம் போட முயன்ற போது கழுத்தை நெரித்து அவளை கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுஷில்குமார் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் ஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுபானி மாவட்ட தாழ்த்தப்பட்ட சமூக வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 8 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.