கலைஞர் பிறந்தநாள் அன்று மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

1 Min Read

சென்னை, மே 31- சென்னையில் மின்சார பேருந்து சேவையை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், மின்சார பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டு, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றை இயக்கும் வகையில் ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், பெண்களுக்கு இலவச சேவை வழங்கும் சாதாரண கட்டண பேருந்து, விரைவு பேருந்து, குளிர் சாதன பேருந்து என அனைத்து வகைகளிலும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 5 பணிமனைகளில் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி 120 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதை தொடர்ந்து, மற்ற முக்கிய நகரங்களுக்கு மின்சார பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *