கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.5.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தங்க நகைக் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.

தி இந்து:

* டிசம்பர் 2024 இல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரே குற்றவாளியான ஞானசேகர் குற்றவாளி என சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனையின் அளவு ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

* தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என பேச்சு.

* ஹிண்டன்பர்க் வழக்கில் செபி அமைப்பின் மேனாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள்: லோக்பால் ஒரு முழு பெஞ்ச் தீர்ப்பில் தள்ளுபடி செய்துள்ளது,

* அலிகார் வழக்கு: கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சி அல்ல: உ.பி. அலிகாரில் மே 24 அன்று நான்கு பேர் தாக்கப்பட்டு இறைச்சி ஏற்றப்பட்ட மினி லாரிக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில், கேள்விக்குரிய இறைச்சி மாட்டிறைச்சி அல்ல என தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வீட்டில் ரொக்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி வர்மா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர அரசு திட்டம். அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் ஆதரவு.

தி டெலிகிராப்:

* மே மற்றும் டிசம்பர் 2021க்கு இடையில் அசாமில் 80 போலி என்கவுண்டர்கள் மரணங்கள் குறித்து விசாரிக்க அசாம் மனித உரிமைகள் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கர்னல் சோபியா குறித்த சர்ச்சை பேச்சு; மபி பாஜக அமைச்சருக்கு எதிராக எஸ்அய்டி இடைக்கால அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *