2025 ஜூன் 19 அன்று நடைபெற விருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர்களாக
- பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
- எஸ்.ஆர்.சிவலிங்கம்
- ரொக்கையா மாலிக் (என்கிற)
கவிஞர் சல்மா
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.