லண்டன், மே 26 ‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்கள் வெளிநாட்டு தமிழர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன. தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகள் என இங்கிலாந்து நாட்டின் சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சர் சர். ஸ்டீபன்டிம்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
அயலக தமிழர் சாதனை விருது
இங்கிலாந்து நாட்டின் ஈஸ்ட் ஹாமில் “அயலக தமிழர் சாதனை விருது 2025” வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அய்க்கிய இராச்சியத்தின் சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சர் சர் ஸ்டீபன் டிம்ஸ், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இங்கிலாந்து அமைச்சர் சர். ஸ்டீபன் டிம்ஸ் சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாடு அரசின் நலத் திட்டங் களை வியந்து பாராட்டி முதல மைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உலகளாவிய அளவில் வாழும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற் கும், பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகளையும் திட்டங்களையும் பாராட்டுகிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் நலனை மேம்படுத்துவதில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். குறிப்பாக “தமிழ்நாட்டில் குடியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்டங்களைத் தொடங்குவதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது அவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதித் திட்டங்களும் சமூகப் பாதுகாப்பு சலுகைகளும் தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஆழ்ந்த அர்ப்ப ணிப்பை பிரதிபலிக்கின்றன,”
புதுமையான முயற்சி!
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாது காப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அயலக தமிழர் வாரிய அடையாள அட்டைமற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் புதுமையான முயற்சி. “இந்தத் திட்டங்கள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன, மேலும் தமிழர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் தமிழர்களின் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துகின்றன.” மேலும் அயலக தமிழர் வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் பயன்களான விபத்து மரணத்திற்கு ரூ. 10 இலட்சம் மற்றும் நிரந்தர இயலாமை / உடற் குறைபாட்டிற்கு ரூ.5 இலட்சம், மருத்துவ செலவிற்காக ரூ. 1 லட்சம், அயல்நாடுகளில் இறக்கும் குறைந்த வருவாய் கொண்ட தமிழர்களின் குடும்பங்களுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தமிழர்களின் குடும்பங்களுக்கான ரூ.1,000/ ஓய்வூ தியம், அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா 24 மணிநேர தொலைபேசி வசதி, மற்றும் சட்ட உதவி மய்யம், என பல்வேறு திட்டங்கள் பாராட்டுக்குரியவை. மேலும் கல்வி மற்றும் தொழில்முனைவு முதல் பொது சேவை மற்றும் கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளில் தமிழர்களின் குறிப்பிட த்தக்க பங்களிப்புகளுக்காக இங்கிலாந்தில் உள்ள தமிழ் சமூகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் சா.மு நாசர், அய்க்கிய இராஜ்ஜியம் (U.K.) நாட்டின் திமுக அயலக அணி அமைப்பாளர் செந்தில், துரை கண்ணன், விஜய் பார்த்திபன், நவீன் ராமர், கழக மாநில சிறுபான்மையினர் அணி இணைச் செயலாளர் சி.ஜெ ரால்டுஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.