டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நான்கு மாநிலங்களில் அய்ந்து பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்: ஜூன் 23 வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். போன்றவற்றை தி.மு.க துணிவுடன் எதிர் கொள்ளும். எதிர்க்கட்சியை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
* கீழடி குறித்து ஒன்றிய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கருத் துக்கு திமுக இளைஞர் அணி கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘வீர உணர்வு இல்லை’: பஹல்காமில் நடந்த தாக்குதலின் போது சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும், தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் வீர உணர்வு கொண்டிருக்கவில்லை, அரியானா பாஜக எம்.பி. ராம்சந்தர் ஜாங்கிரா சர்ச்சை பேச்சு.
* பாஜக தலைவர்களின் இது போன்ற பேச்சுகளுக் காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஜங்க்ராவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
* பாஜக எம்பி ஜங்க்ராவின் தற்போதைய பேச்சு பாஜகவின் அற்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கொச்சி கடற்கரையில் சரக்கு கப்பலுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் கசிவு; விழுந்த கொள்கலன்கள் கேரள கடலோரப் பகுதிகளை மிதந்து அடையக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கொள்கலன்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற லட்சியம் உள்ளது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்: அனை வரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி யில், திருநங்கைகளை ஊர்க்காவல் படை சேவை களில் சேர்க்க முடிவு; முதல் கட்டத்தில், 50 திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
* ‘எதிர்க்கட்சி ஆட்சியின் போது ஊழல் செய்ததற்காக திமுக ஏன் தன்னை சமரசம் செய்து கொள்ள வேண்டும்?’ மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது: தமிழ்நாட்டின் நலனுக்காகவே டில்லி சென்றேன்: எதிர்க்கட்சிகளை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை: விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி.
.- குடந்தை கருணா