பெரியாரியல் என்னும் வாழ்வியல் பயில குற்றாலச் சாரல் வரவேற்கிறது

1 Min Read

அரசியல்

குற்றாலம், ஜூன் 27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூன் 28, 29, 30 ஜூலை 1 ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் தொண்டறச் செம்மல்  வீகேயென் மாளிகையில் நடைபெற உள்ளது.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் திராவிடர்கழக முக்கிய  பொறுப்பாளர்கள், பேராசிரியர் பெருமக்களும் பங்கேற்று பெரியாரியல் வகுப்பு எடுக்க உள்ளனர்.

தென்காசி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தோழர்களின் கடும் உழைப்பில் மிகச்சிறந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

குற்றாலம் முதன்மை அருவி, அய்ந்தருவி, பழைய குற்றாலம் அருவி அனைத்திலும் சாரல் தொடங்கியுள்ளதால் தண்ணீர் வரத் தொடங்கி யுள்ளது. குற்றாலத்தில் கொள்கை சாரலோடு குற்றாலச் சாரலில் நனைய அன்புடன் வரவேற் கிறோம். எங்களோடு இணைந்து அனைவரையும் குற்றாலச் சாரலும் வரவேற்கிறது

நாளை சந்திப்போம் குற்றாலத்தில்

– இரா.ஜெயக்குமார், 

மாநில ஒருங்கிணைப்பாளர், 

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்),  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *