மீன்பிடி தடைக் காலம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணத் தொகை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 22   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது.   இந்த நாட்களில் திருவள்ளூர் மாவட்ம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான  14 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரம் விசைப்படகுகள், இழுவை படகுகள் கடலுக்கு செல்வது இல்லை.

ரூ.8ஆயிரம் நிவாரணம்

இதன் காரணமாக, மீன்பிடிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பை சார்ந்து வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி தடைக் கால நிவாரணமாக தலா ரூ.8 ஆயிரம் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளம், மீனவர் நலத் துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 பேருக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையிலான ஆணைகளை வழங்கினார். மீன்வள துறை செயலர் ந.சுப்பையன், துறை ஆணையர் இரா.கஜலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *