டிப்ளமோ படிக்க தேவையான கல்வித் தகுதி பற்றி தவறான தகவல்கள்

1 Min Read

சமூக வலைதளங்களில் பரப்பிய இந்து முன்னணி

சென்னை, மே 21- பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், பிளஸ்1 வகுப்பு படிக்காதவர்கள் கூட நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டில் சேரலாம் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின் சாராம்சத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்று காட்சிப்பதிவு ஒன்றை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பிளஸ்-2 வகுப்பில் கணிதம் மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில் படித்த மாணவர்கள் மட்டுமே நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டில் சேர முடியும் என்ற விதி இருந்தது.

இந்த நிலையில் பிளஸ்-2 வகுப்பை நிறைவு செய்த வணிகவியல் மற்றும் கலைப்பிரிவு உள்பட அனைத்து மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டில் சேரலாம் என்ற தளர்வைத் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அண்மையில் அறிவித்தது. பிளஸ்-1 வகுப்புப் படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2ஆம் ஆண்டில் படிக்கலாம் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *