கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.11.2023

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉திமுக எம்.பி.யும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா, ஸநாதன தர்மம் குறித்து பேசியதற்காக கோ வா ரன்டோ ரிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் – தான் கூறிய கருத்துகள் எந்த வகையிலும் அரசமைப்பிற்கு முரணானவை அல்ல, “சட்டவிரோத நடைமுறைகளை” விமர்சிப்பதும் கண்டனம் செய்வதும் ஒரு பொது ஊழியராக தனது கடமை என்றும் தனது பதில் மனுவில் வாதிட்டுள்ளார்.

👉சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண் களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்: முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உறுதி.

👉 தெற்கு மண்டலத்தில் உள்ள 4  அய்.அய்.டி.களில் சேர்ந்தவர்களில் பெண்கள் 26 சதவீதம். இந்திய சராசரி 19 சதவீதம் ஆகும்.

👉சமூகத்தில் நிலவும் பொருளாதாரப் பிளவைக் கடந்தும் இட ஒதுக்கீடு போராட்டம் மராத்தியர்களை ஒருங்கிணைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு கடும் நெருக்கடியைத் தந்துள்ளது.

தி டெலிகிராப்:

👉 புதிய சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகளை மோடி அரசு, 2011 சமூக பொருளாதார சர்வே மூலம் சேகரிக்கப்பட்ட பொருளா தாரத் தரவை வெளியிடும் போது பிழைகள் மற்றும் நகல்களை மேற்கோள் காட்டி ஜாதித் தரவுகளை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *