பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 29 – 12.5.2023 வெள்ளிக் கிழமை மாலை 6:30 மணி முதல் 8:00 மணிவரை அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வரவேற்புரையை பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை உரையாற்றினார். 

தொடர்ந்து சிறப்புரையாக சூரிய கிருஷ்ணமூர்த்தி பகுத்தறிவாளர்கள் பார்வையில் இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மனித சுயமரியாதைக்காக செயல்படும் இயக்கமாக நம் பகுத்தறி வாளர் இயக்கம் உள்ளது. எந்தவித பின்புலனும் இன்றி எந்தவித தேவை களும் இன்றி சமுதாய முன்னேற்றத் திற்காக தோற்றுவித்த நோக்கத்தோடு இன்றுவரை செயல்பட்டு வருகின்றது. பெரியார் கொடுத்த பகுத்தறிவே இந்த திராவிட மாடல் சாதனை என்றார் அவர்.

முடிவாக மு.இரா.மாணிக்கம் நன்றி யுரையாற்றி நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *