மாநகராட்சி பள்ளிகளுக்கு நூலகங்கள் புத்தாக்க வகுப்பறைகள் அமைக்க ரோட்டரி சங்கத்தின் செயல்திட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 சென்னை, ஜூன் 29 – சென்னை அய்டிசி கிராண்ட் சோழா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் 2023-2024-க்கான தலைவராக டாக்டர் சி.ஏ.அபிசேக் முரளி மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக ஒன்றிய வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பி.செல்வ கணேஷ் கலந்து கொண்டு சமுதாயத்திற்கான சேவை யின் முக்கியத்துவம் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பு வதில் வருமான வரியின் பங்கு குறித்து பேசினார். கவுரவ விருந்தினரான ரோட்டரி மாவட்ட கவர்னர் என். எஸ். சரவணன் பேசுகையில்:-  தேர்ந்தெடுக்கப்பட்ட ரோட் டரியின் பங்கு குறித்தும், உலகில் நம்பிக்கையை உருவாக்குவதில் நெக்ஸ்ட் ஜென் எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பது குறித்தும் பேசினார்.

இந்நிகழ்வில் ஜென் 11ஆவது தலைவராக பதவி ஏற்ற அபிசேக் முரளி கூறுகையில்;- மேலும் இந்த ஆண் டிற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார், இதில் பின்தங்கிய பள்ளிகளுக்கு 20க்கும் மேற்பட்ட நூலகங்கள் கட்டுதல், தொழிலாளர்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிதி முகாம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் உள் ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் குறித்தும் பேசினார். செயலாளர் யஷ்வர்தன் பல்சானி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *