கோபி கழக மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி இந்திரா நகர் கழக குடும்பத்தை சேர்ந்த செல்வன் – ராதா ஆகியோரது மகன் சந்தோஷ் குமார் புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 531 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவரை இன்று 08.05.2025 நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா வாழ்த்தினார். உடன்: திராவிடர் கழக கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், க.மூர்த்தி, மா.சூர்யா, அ. அஜித்குமார்.