பெரிய நிறுவனங்களின் அழுத்தத்தால் மரபணு மாற்றப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது

2 Min Read

புதுடில்லி, மே 8 பெரு நிறுவனங்க ளின் அழுத்தத்தால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாக மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட
அரிசி அறிமுகம்

டிஆர்ஆர் தன் (கமலா), பூசா டிஎஸ்டி 1 ஆகிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் 5.5.2025 அன்று அறிமுகம் செய்தார். பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும் அரிசி விளைச்சலை 30% வரை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மர பணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடும் எதிர்ப்பு

பெரு நிறுவன லாபிகளின் அழுத்தத்தால் ஒன்றிய அரசே சட்டவிரோதமான செயல்களை செய்து வருவது அதிர்ச்சி அளிப்ப தாக அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் உள்ள ஆபத்து குறித்து ஏராளமான அறிவியல்பூர்வ சான்றுகள் உள்ளதாக சுட்டி காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள், நாட்டின் பன்முகத்தன்மை உடைய அரிசி மரபணு தொகுப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்று எச்சரித்துள்ளது. எந்த வித பாதுகாப்பு பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமல் இந்த அரிசி வகைகள் வெளியிடப்பட்டுள்ள தாகவும் மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு சாடி உள்ளது. அறிவுச் சார் சொத்துடைமை தொழில் நுட்பங்களை அறிமு கப்படுத்தபடுவதால் விவசாயிகளின் விதை இறையாண்மையில் அரசு சமரசம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த புதிய வகை அரிசியின் அறிவுசார் சொத்துரிமை குறித்த வெளிப்படைத்தன்மையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அரிசி வகைகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு சோதனை விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்பு, பொது நலனுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *