காஞ்சிபுரம், மே 4- காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அபிராமி விடுதி அரங்கத்தில் 29.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பா. இளம் பரிதி தலைமையில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ.சிறீதர் வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி.அசோகன், ச. வேலாயுதம், மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள், மாவட்ட கழக இளைஞரணி தலை வர் வீ. கோவிந்தராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புரட்சிக் கவிஞர் படத்திறப்பு!
தலைமைக் கழக ஒருங்கிணைப் பாளர் பொன்னேரி வி. பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன் ஆகியோர் புரட்சிக் கவிஞரின் படத்தைத் திறந்து வைத்து, புரட்சிக் கவிஞரின் புரட்சிகர சிந்தனைகள் குறித்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு முற்போக்குச் சிந்தனைகளை பாடல்களாக வடித்த செய்திகள் குறித்தும் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரை புரட்சிக் கவிஞர் பாடிய, எழுதிய கருத்துகள் குறித்தும் உரையாற்றினர்.
ஒருங்கிணைப்பும் நன்றியும்!
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி, ‘காலனி’ என்ற சொல்லை ஆவணங்களிலும், பொதுவெளியிலும் இனி பயன் படுத்தக் கூடாது என்று ஆணையிட்ட தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அனைவரது சார்பிலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
புரட்சிக் கவிஞருக்குப் புகழுரை!
பேசும் கலை வளர்ப்போம் – அமைப்பின் நிறுவனர் மருத்துவர் கு. ஆறுமுகம், தன்னாட்சித் தமிழகம் பெ. பழனி, தமுஎகச கவிஞர் கு.ஆறுமுகம், ‘புதிய பாசறை’ பாரதி விஜயன், எழுச்சிப் பாடகர் உலக ஒளி, ரத்தின. பச்சையப்பன், திருக்குறள் பேரவை குறள் அமிழ்தன், தோழர் ரவி பாரதி, அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளரும், திமுக சொற்பொழிவாளருமான நாத்திகம் நாகராசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் காஞ்சி அமுதன் ஆகியோர் புரட்சி கவிஞரின் பாடல்கள் குறித்தும் சமூக மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து உரையாற்றினர்.
அவர் மட்டும் ஏன்
புரட்சிக் கவிஞர்?
புரட்சிக் கவிஞர்?
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும் திராவிடர் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் காஞ்சி கதிரவன், புரட்சிக் கவிஞர் பாடிய பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்கல்வி, கைம்பெண் மறு மணம், கருத்தடை, ஜாதி ஒழிப்பு, சமத்துவத்துவம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, தமிழ் தமிழர் முன்னேற்றம், ஹிந்தி எதிர்ப்பு முதலிய செய்திகளைக் குறிப்பிட்டு இவற்றால் அவர் புரட்சிக் கவிஞர் என்று குறிப்பிட்டார்.
புரட்சிக் கவிஞர் பிறந்தநாளை யொட்டி தமிழ் வார விழா நடத்தும் தமிழ் நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அனைவரும் கரவொலி எழுப்பினர்.
பங்கேற்றோர்
பெரியார் பெருந்தொண்டர் போளூர் பன்னீர்செல்வம், வாலா ஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், கழகத் தோழர் கவி நம்பி, மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் அருண்குமார், தோழர் லெனின், பகுத்தறிவாளர் கழகத் தோழர் பல்லவர்மேடு சேகர், கவிஞர் அமுதகீதன், தோழர்கள் அன்பு, வெங்கடேசன், ஜெயபிர காஷ், குமரேசன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.