என்.ஆர்.தியாகராஜன் 55ஆம் ஆண்டு நினைவு நாள்

viduthalai
1 Min Read

தேனி, மே 4- தேனி மாவட்டம். பிரிக்கப்படாத ஜில்லா  போர்டு தலைவராக.. பலமுறை சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்ற மேலவை உறுப்பினராக, தந்தை பெரியார் அவர்கள் மீது தீவிர பற்று கொண் டவராக, இப்பகுதியில் தந்தை பெரியார் அவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் அவர் தலைமை யில் தான் நடந்தது.

பொதுச் சேவை செய்வதில் முன்னோடியாக இருந்தவர்.  என்.ஆர். தியாகராஜன் மறைவுற்று 55 ஆண்டுகள் நினைவை போற்றும் முகமாக.. அனைத்து சமூக அமைப்புகள் அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து 27.4.2025 அன்று தேனியில் சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை யாற்றினார். என்.ஆர்.டி.விருது பெற்ற சொல்வேந்தர் கம்பம் செல்வேந்திரன்  ஏற்புரையாற்றினார்.

திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *