ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள்

Viduthalai
1 Min Read

புதுப்பிக்கத் தவறிய மாணவர்கள்
கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும்

பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை, ஏப்.30- பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு எனும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் ஜூன் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 7 வயது வரையுள்ள மாணவர்களுக்கு முதலாவது கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல், அதை மேற்கொள்ளத் தவறிய 8-14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் 15-17 வயதுள்ள மாணவர்களுக்கு இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயின்றுவரும் மாணவர்கள் கட்டாய பயோ – மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள இ-சேவை மய்யங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மய்யங்களில் செயல்படவுள்ள சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் தங்களது புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஆணை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், புதிதாக பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களிடமும் பள்ளியில் சேரும்போதே இப்பணியை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும் எனத் தெரிவித்துள்ளார் அ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *