உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு

1 Min Read

உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கலையரங்கத்தில் ஏப்ரல் 29, 2025 அன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா, இலெமுரியா அறக்கட்டளை, மும்பை, கருநாடக மாநில தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை, புதுச்சேரி, வலைத்தமிழ், அமெரிக்கா. கவிஞர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து “உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைமலை இலக்குவனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரைவில் வெளியிட உள்ள அந்த புத்தகப் பிரதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் பொறியளர் த.ஞானசேகரன், சு.குமணராசன் (மும்பை), துரைக்கண்ணன் (அமெரிக்கா), கலைமாமணி பொன்னடியார், முத்துமணிக்கண்ணன், மு.முத்துராமன், முனைவர் மைக்கேல் பாரடே உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *