உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கலையரங்கத்தில் ஏப்ரல் 29, 2025 அன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா, இலெமுரியா அறக்கட்டளை, மும்பை, கருநாடக மாநில தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை, புதுச்சேரி, வலைத்தமிழ், அமெரிக்கா. கவிஞர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து “உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைமலை இலக்குவனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரைவில் வெளியிட உள்ள அந்த புத்தகப் பிரதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் பொறியளர் த.ஞானசேகரன், சு.குமணராசன் (மும்பை), துரைக்கண்ணன் (அமெரிக்கா), கலைமாமணி பொன்னடியார், முத்துமணிக்கண்ணன், மு.முத்துராமன், முனைவர் மைக்கேல் பாரடே உள்ளனர்.