எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா! பள்ளிக்கு தந்தை பெரியார் படம் வழங்கினர்

1 Min Read

வேட்டவலம், ஏப்.28- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாண வர்களுக்கு பிரிவு உபசார விழா கடந்த 23-04-2025 அன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.ஏ.முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியை மார்கிரேட் மேரி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் மாணவர் களுக்கு திருக்குறள் புத்தகம், தமிழ் அகராதி, நோட்டுப் புத்தகம், பேனா, ஆன்லைன் பென்சில் அடங்கிய தொகுப்பு, குழு நிழற்படம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, கவுரி, சுடர்விழி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினர்.

மேலும் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படத்தையும், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பு செய்தனர். இறுதியாக எட்டாம் வகுப்பு மாணவர் செபாஸ்டின் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *