குழந்தைகள் தாய்மார்களின் உடல்நிலையைப் பாதுகாக்க ‘குழந்தையின் வாழ்வில் முதல் ஆயிரம் நாட்கள்’ நிதி உதவித் திட்டம்

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

குழந்தைகள் தாய்மார்களின் உடல்நிலையைப் பாதுகாக்க 

‘குழந்தையின் வாழ்வில் முதல் ஆயிரம் நாட்கள்’ நிதி உதவித் திட்டம் 

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூலை 2 தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் ‘குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நாட்கள் நிதி உதவி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, சட்ட மன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன்  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 101 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப கால சிறப்பு நிதியுதவி முதல் தவணை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- வாழ் வின் முதல் 1000 நல்நாட்களுக்கு குழந்தை களையும், தாய்மார்களையும் எவ்வாறு ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது என் கின்ற திட்டம் தான் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள். அதாவது, கருத்தரித்த நாள் தொடங்கி 2 வயது முடிவடையும் நாள் வரை கணக்கில் கொள்ளப்படும், 270_280 நாட்கள் மகப்பேறு காலம், சிசு பருவம் 365 நாட்கள், குழந்தைப் பருவம் 365 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டமானது இங்கிருக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டும் கிடை யாது. தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங் களில் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள 23 வட் டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும். தமிழ் நாட்டில் 74,400 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான இந்த திட்டம் ரூ.38.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 37 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்கும்போது 74 ஆயி ரத்து 400 குழந்தைகள். இக்குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச் சத்திற்காக கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் தரித்த உடன் முதல் தவணை (18-20-_ஆவது வாரம்) ரூ.1000.

இரண்டாம் தவணை (26-28-_ஆவது வாரம்) ரூ.1000, மூன்றாம் தவணை (37-38-_ஆவது வாரம்) ரூ.1000, 6-ஆவது மாதம் 4-ஆம் தவணை ரூ.500, 12ஆ-வது மாதம் 5-ஆம் தவணை ரூ.500, 18-ஆவது மாதம் 6-ஆம் தவணை ரூ.500, 24-ஆவது மாதம் 7ஆ-ம் தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3 ஆயிரம்-, 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2 ஆயிரம் என மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கப் படவுள்ளது. இந்த தொகை முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு வழங்கப்படுவது குறித்து கட்டுப்பாடு ஏதும் இல்லை.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பகால ரத்தசோகை தடுக்கப்படும். அதேபோன்று பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும். 2 ஆண்டுகளுக்கான குழந்தைகள் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உங்களுக்கு வழங் கும் இந்த நிதி உதவிக்கான பணத்தினை கட்டாயம் உங்கள் உடல் ஊட்டச்சத்தை யும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தை இறப்பு விகிதம் இந்தியாவில் ஆயிரத்திற்கு 28, தமிழ்நாடு அளவில் ஆயிரத்திற்கு 13, மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கு 97, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்திற்கு 54 என்ற விகிதத்தில் உள்ளது. இதனை மேலும் குறைத்திடும் வகையில் முதல்-அமைச்சர் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *