கிராம நியாய விலைக் கடைகளில் கட்டுனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

1 Min Read

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) கேள்வி நேரத்தின்போது கங்கவல்லி எம். எல்.ஏ. நல்லத்தம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார்.

மேலும் நியாயவிலைக் கடையில் கைரேகை மூலம் பொருட்கள் பெறப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளதால் அதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும். நியாயவிலைக் கடையில் கைரேகை பதிவு, ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. நகர பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கட்டுனர் உள்ளதால் பொருட்கள் எளிதில் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் கட்டுனர் இல்லாத காரணத்தால், பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமப் பகுதியில் கட்டுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *