வி.சி.க. சார்பில் நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது தொல்.திருமாவளவன் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப். 25- விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரைப்படக் கலைஞர் சத்ய ராஜுக்கும் வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சான்றோருக்கு விருதுகள்

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “விசிக சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விரு துகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.சமூகம், அரசியல், பண்பாடு, கலை – இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 2022ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி” விருதும் வழங்கி வருகிறோம் .

சத்யராஜுக்கு பெரியார் ஒளி

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரைப்படக் கலைஞர் சத்யராஜுக்கும் வழங்கப்படுகிறது. ‘மார்க்ஸ் மாமணி’ விருது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவுக்கும், ‘காமராஜர்’ விருது புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வைத்திலிங்கத்துக்கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது பவுத்த ஆய்வறிஞர் பா.ஜம்புலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. ‘காயிதேமில்லத் பிறை’ விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவிக்கும், ‘செம்மொழி ஞாயிறு’ விருது யாழ்ப்பாணம் தமிழறிஞர் பேராசிரியர் அ.சண்முகதாஸுக்கும் வழங்கப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *