பயங்கரவாத தாக்குதல் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, ஏப். 25- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப் பேற்று ஒன்றிய உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீ ரில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பயங்கரவாதத்தை கடுமை யாக நசுக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மிரில் பாஜக எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி உள்ளது. நாட்டின் உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

அரசியல் சட்டப் பிரிவு 370 அய் அகற்றிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று பாஜக தொடர்ந்து கூறி வந்தது. பிறகு அரசியல் சட்டப்பிரிவு 370 அய் அகற்றிவிட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்லலாம் எனத் தெரிவித்தார்கள். அதை நம்பி அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் தொல். திருமாவளவன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *