செழித்திருந்த மழைக்காடா ஆஸ்திரேலியா?

1 Min Read

ஆஸ்திரேலியா என்றாலே பாதிப் பாலைவனமாக இருக்கின்ற கண்டம் என்று தானே நினைக்கிறோம்? இன்றைய தேதியில் அது உண்மைதான் என்றாலும் முற்காலங்களில் ஆஸ்திரேலியா செழிப்பான பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்புக் கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நியூ சவுத் வேல்ஸ். இங்கே அகழாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர்கள் நன்னீரில் வாழ்கின்ற ஃபெருயாஸ்பிஸ் பிராக்சி (Ferruaspis brocksi) இனத்தைச் சேர்ந்த மீனின் தொல்லெச்சத்தைக் கண்டுபிடித்தனர்.

இது 1.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்றைய நிலையில் வறண்ட நிலமாக இருக்கக்கூடிய இந்தப் பகுதி ஒரு காலத்தில் மழைக்காடாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்த இடத்தில் மீனின் தொல்லெச்சம் கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. இது பெரிய அளவில் சிதையாமல் கிடைத்துள்ளது. மீனின் வயிற்றில் அது உட்கொண்ட உணவு கூடப் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் கிடைக்கும் பிற தொல்லெச்சங்களை ஆராய்ந்தால் இந்த பகுதி எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதி பசுமையான காடுகளாக இருந்திருக்க வேண்டும். கண்ட நகர்வின் காரணமாக ஆஸ்திரேலியா வடக்கு நோக்கி நகர்ந்ததாலும், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும் அடர்ந்த காடுகள் பாலைவனமாகவும், வறண்ட நிலமாகவும் மாறியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *