புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

1 Min Read

புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது.

நேற்று (21.4.2025) காலை சட்டப் பேரவை அருகிலுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே, அன்பரசன், மாவட்டச் செயலாளர் தி. இராசா, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், திராவிடர் கழக நகராட்சி கொம்யூன் பொறுப்பாளர்கள் செ.இளங்கோவன், மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், எஸ் கிருஷ்ணசாமி, ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், முகமது நிசாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *