வணிகத்தில் மதவாதத்தை கிளப்பும் ராம்தேவ் வெளியிட்ட காணொலிக்கு நீதிமன்றம் கண்டனம்

2 Min Read

புதுடில்லி, ஏப்.23 ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் காணொலிகள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் உடனடி யாக நீக்க வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொலி

பாபா ராம்தேவ், அவரது பதஞ் சலி நிறுவனத்தின் சர்பத் ஒன்றை அறிமுகப்படுத்தி வெளியிட்ட காணொலி ஒன்றில் பிரபல சர்பத் பிராண்டான ரூஹ் அஃப்சாவை மத ரீதியாக தாக்கியிருந்தார். அந்த காணொலியில் பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தை அறிமுகப்படுத்தி பேசிய ராம்தேவ், “சில நிறுவனங்கள் சர்பத் தயாரிக்கின்றன. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் மசூதி களை உருவாக்கும். நமது செயல் பாடுகள் குருகுலங்களை உருவாக்கப் போகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ‘லவ் ஜிகாத்’ போல இது ‘சர்பத் ஜிகாத்’ என்றும் கூறியிருந்தார். இந்த காணொலி பரவியதைத் தொடர்ந்து, ரூஹ் அஃப்சாவைத் தயாரிக்கும் ஹம்தர்த் நிறுவனம் பாபா ராம்தேவுக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

ராம்தேவுக்கு எதிரான இந்த மனுவில் நீதிபதி அமித் பன்சால் கூறுகையில், “இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கு கிறது. இது நியாயப்படுத்தவே முடியாதது” என்று தெரிவித்தார்.

வழக்கில் ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோகத்கி, “இது ஒரு அதிர்ச் சியூட்டும் வழக்கு. இது ரூஹ் ஆஃபசாவை இழிவுபடுத்துவது என்பதையும் தாண்டியது. பாபா ராம்தேவின் கருத்து வெறுப்பு பேச்சுக்கு சமமானது” என்று வாதிட் டார்.

சிறிய இடைவேளைக்கு பின்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாபா ராம்தேவ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் நாயர், எனது கட்சிக்காரர் அந்த காணொலிகளை உடனடியாக நீக்கி விடுவார்” என்று தெரிவித்தார்.

விசாரணை ஒத்தி வைப்பு

இதனைத் தொடர்ந்து, எதிர் காலத்தில் பாபா ராம்தேவ் எந்தவிதமான அறிக்கையோ, விளம்பரங்களோ அல்லது சமூக ஊடக பதிவுகளோ வெளியிட மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இன்னும் ஒருவார காலத்துக்குள் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ரூஹ் அஃப்சா பானத்தை தயாரித்து வரும் ஹம்தர்த் நேஷனல் பவுண்டேஷன் (இந்தியா) நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகள், எண்ணெய்கள், சிரப்கள் மற்றும் மது இல்லாத பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *