காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசின் பாராட்டத்தக்க செயல்!

Viduthalai
2 Min Read

கோயில் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம்

புதுடில்லி, ஜூலை 3 ராஜஸ்தானில் ’தேவஸ் தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழைமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை அதற்கான அர்ச்சகர் களையும் நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. 

இப்பணிக்கு கடைசியாக 2014இல் விளம் பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 ஆண்டுகளுக் குப் பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தற்போதைய காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த 17 பேரில் 8 பெண்கள், தாழ்த்தப் பட்டோர், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

பார்ப்பனர்கள் எதிர்ப்பாம்!

இதனிடையே காலம் காலமாக ஜாதி ஆணவத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்களிடையே இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு  கிளம்பியுள்ளதாம்.

ராஜஸ்தானின் சர்வ பிராமின் மகாசபா வின் தலைவரான தினேஷ் சர்மா, அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், மாநிலம் முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்ப்பனர்களின் Ôவிப்ரா பவுண்டேசன்ஸ்Õ எனும் அமைப்பு, ராஜஸ்தானின் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளது. அதில், முதலமைச்சர் அசோக் கெலாட், அர்ச்சகர்கள் நியமனத்தில் தவறான வழி முறைகளை பின்பற்றியதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசு விளக்கம்

அரசு விதிமுறைகளின்படி சமஸ்கிருதம் அறிந்தவர்கள் அர்ச்சகர்களாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த விதியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும், பெண்களையும் அமர்த்தக் கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும் ராஜஸ்தான் அரசு விளக்கம் அளித்து உள்ளது.

வழக்கமாக பார்ப்பனர்கள் மட்டுமே இப் பணியில் அதிகமாக உள்ளனர். ராஜஸ்தானின் சில பகுதிகளில் வழிவழியாக ஒரே பரம் பரையில் வந்த குறிப்பிட்ட சமூகத்தின் பிற் படுத்தப்பட்டவர்களும் அர்ச்சகர்களாக இருந்துள்ளனர்.

அரசர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜஸ் தானின் ஆம்பர் கோட்டையில் ஒரு துர்கா கோயிலில் ஒரு பெண் அர்ச்சகர் இருந்துள் ளார். ஆனால், தாழ்த்தப்பட்டோர் சமுதாயத் தினர் இதுவரையும் அர்ச்சகர்களாக அமர்த் தப்படவில்லை எனக் கூறப்படுகின்ற நிலை யில் தற்பொழுது அசோக் கெலாட் தலைமை யிலான காங்கிரசு அரசின் இந்த நியமனம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படு வதுடன், பாராட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *