அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

1 Min Read

புதுடில்லி, ஏப்.21 டில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இன்று (21.4.2025)  பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர்

4 நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை தரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பிரதமா் மோடியுடன் நடத்தவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (20.4.2025) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க துணை அதிபா் உடனான சந்திப்பில், அந்நாட்டில் இருந்து இந்தியா்கள் நாடு கடத்தப்பட்ட விதம் குறித்தும், அமெரிக்காவில் இந்திய மாணவா்கள் அச்சமான சூழலில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்தும் அவரிடம் பிரதமா் மோடி கவலை தெரிவிப்பாரா?

உலக வா்த்தக அமைப்பு வாயிலாக இந்தியா பெருமளவில் பலனடைந்துள்ள நிலையில், அந்த அமைப்பால் உறுதி செய்யப்பட்ட பன்முக விதிமுறைகள் அடிப்படையிலான வா்த்தக அமைப்புமுறை சிதைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இந்தியாவின் கவலையை பிரதமா் முன்வைப்பாரா?

பருவநிலை ஒப்பந்தம்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவின் விலகல் தொடா்பான கவலையை துணை அதிபரிடம் தெரிவிப்பாரா மோடி?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் உலக வெப்பமயமாதலை நிர்வகிக்க கடந்த 2015-ஆம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமும், உலகளாவிய பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையில் உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

இருதரப்பு வா்த்தக தாராளமயமாக்கலை மேலும் விரிவுபடுத்துவது, இந்திய விவசாயிகள், குறு-சிறு-நடுத்தர தொழிற்துறையினருக்கு பாதகமாகிவிடக் கூடாது என்பதை அமெரிக்க துணை அதிபரிடம் பிரதமா் உறுதிபட கூறுவாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *