‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகப் புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருகிறது!

Viduthalai
1 Min Read

 ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!

அரசியல்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தவர்; அதோடு சமூகநீதியில் ஆழ்ந்த நம் பிக்கை உடையவர். அவர், அனைத்து ஜாதியினரும் – ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தது பாராட்டத்தக்கது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பின்பற்றி செயல்பட்டால், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் நிலைத்த சாதனையாக அதனை ஆக்கிட முடியும்! சமஸ்கிருதம் மட்டுமே தனித்த மொழியாக இருக்க முடியாது.

வடபுல ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரியார் – அம்பேத்கர் விருப்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகப்புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருவது மகிழ்ச்சிக்குரியது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.7.2023 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *