வக்ஃபு திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றிய வழக்கு: ‘வக்ஃபு வாரியங்களில் புதிய நியமனம், சொத்துக்கள் மீது நடவடிக்கை கூடாது!’

viduthalai
4 Min Read

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

புதுடில்லி, ஏப். 18 வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது, ஒன்றிய அரசு 7 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா  தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. “அதுவரை, வக்ஃபு திருத்தச் சட்டத்தின் பிரிவு  9 மற்றும் 14-இன் கீழ் மத்திய வக்ஃபு கவுன்சில்  அல்லது மாநில வக்ஃபு வாரியங்களில் எந்த நியமனங்களையும் செய்யக் கூடாது”, அதேபோல, “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அல்லது  வக்ஃபு என அறிவிப்பு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் மீது, மாவட்ட ஆட்சியர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது” என்றும் உச்சநீதிமன்றம்  இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வக்ஃபு (திருத்த மற்றும் ஒருங்கிணைந்த வக்ஃபு  மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும்  மேம்பாடு) சட்டம் கடந்த ஏப்ரல் 8 அன்று அம லுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து,  இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத் தம் 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, கடந்த 16.4.2025 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கு ரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான், சி.யு. சிங் உள்ளிட்டோர் ஆஜராயினர். ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.  மனுதாரர்கள் தரப்பை வழிநடத்திய மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை  எழுப்பினர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார்  மேத்தா கால அவகாசம் கோரியதன் அடிப்படை யில், விசாரணையை நேற்று (17.4.2025) பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

அரசுத்தரப்பு வாதம்

அதன்படி, நேற்று (17.4.2025) விசா ரணை துவங்கியதும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார்  மேத்தா, “ஒரு சட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுத்தி வைப்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும்,” என்றும், “விதிகளை வெறுமனே படித்துப் பார்ப்பதன் அடிப்படையில் மட்டுமே தடை விதித்துவிட முடியாது” என்றும் கூறினார். மேலும், “லட்சக்கணக்கில் வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே வக்ஃபு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. முழு கிராமங்களே கூட வக்ஃபுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தனியார் சொத்துக்கள் வக்ஃபுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இது  ஏராளமான அப்பாவி மக்களை பாதிக்கிறது,” என்றும் கூறினார்.

அப்போது, “சட்டத்தில் சில நேர்மறை யான விஷயங்கள் இருப்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்; அதேபோல சட்டத்தை நிறுத்திவைக்கக் கூடாது என்று சொல்வதும் சரி தான்” என்ற நீதிபதிகள், “எல்லா நேரத்திலும் சட்டங்களை நீதி மன்றங்கள் நிறுத்தி வைப்பதில்லை” என்றனர். “ஆனால், சட்டத்திற்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும் போது, அதே சட்டத்தின் நடைமுறைகளால் ஏற்கெனவே இருக்கும் நிலைமைகள் மாறக்கூடாது; மக்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்’’ என்றனர். இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் பதிலளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்றார்.

இடைக்கால உத்தரவு

அதற்கு, “முஸ்லிம் அல்லாத உறுப்பி னர்கள் வக்ஃபு வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃபு  கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வக்ஃபுகள் மாற்றப்பட மாட்டாது” என்ற நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால், கால அவகாசம் வழங்கத் தயார்”  என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார். “வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது, ஒன்றிய அரசு 7 நாள்களுக்குள் பதில ளிக்கும். அதுவரை, வக்ஃபு திருத்தச்  சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 14 இன் கீழ் கவுன்சில் மற்றும் வாரியத்திற்கு எந்த நியமனங்களும் செய்யப்படாது” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார். அதேபோல, “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அல்லது வக்ஃபு என அறிவிப்பு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் மீது,  மாவட்ட ஆட்சியர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்” என்றும் தெரி வித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், சொலிசிட்டர் ஜெனரலின் உறுதி மொழியையே இடைக்கால உத்தரவாக பிறப்பித்தது. அதாவது, “நீதிமன்றத்தால் வக்ஃபு என்று அறிவிக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும், அவை பயனரால் வக்ஃபு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது 1995 சட்டத்தின் கீழ் ஆவணங்கள் மூலம் வக்ஃபு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, அவை ரத்து செய்யப்படாது.  வழக்கு முடியும் வரை திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி மத்திய வக்ஃபு கவுன்சில்கள் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாகக் கருதப்படும். வக்ஃபு சொத்துக்களின் நிலையை ஆட்சியர் தீர்மானிக்கும் விதியும் அமலுக்கு வராது”  என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

மே 5 ஆம் தேதிக்கு
விசாரணை ஒத்தி வைப்பு

மேலும், வழக்கை மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடித்தன்மை குறித்த மனுதாரர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்; அடுத்த விசாரணையின் போது, 5 மனு தாரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அந்த 5 பேரை மனுதாரர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *