நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்

Viduthalai
2 Min Read

« மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை  காலிப் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர் வாணையம் (MRB) மூலம் எழுத்துத் தேர்வு வைத்து , இட ஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் விரைந்து நிரப்பிட வேண்டும். 

« கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணியிடங்களை நியமிக்கும் அரசாணை எண்: 401 அய் ரத்து செய்திட வேண்டும். 

« பணி நியமனத்தின் போது சீனியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கருணை அடிப் படையில், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். 

« தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்புநர் நிலை-2 காலிப் பணியிடங்களை MRB மூலம் எழுத்து தேர்வு வைத்து, இட ஒதுக் கீட்டையும் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். 

« மருத்துவ ஆய்வக நுட்புநர்  காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்தம்,தற்காலிகம், அவுட்சோர்சிங் போன்ற பணிநியமன முறை களை கைவிட வேண்டும். நிரந்தர அடிப் படையில் மட்டுமே நியமனங்களை செய்திட வேண்டும். 

« மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் நலன் காத்திட ,2014 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்:417-இன்படி, தனி கவுன்சில் அமைத்திட வேண்டும். 

« தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) வழி காட் டுதல்படி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப,  மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை  இரண் டிற்கான (Grade -2), புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். 

« அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் இரண் டாம் நிலை (நிலை-2), மருத்துவ ஆய்வக நுட்புநர் களின்  பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை காலிப் பணியிடங்களாக அறிவித்திட வேண்டும். 

« தமிழ்நாடு முழுவதும், வட்டார அளவில் ஒருங்கிணைந்த , சிறந்த மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்கி,அதில் மருத்துவ ஆய்வக இரண்டாம் நிலை நுட்புநர்களை (நுட்புநர்-2)  நிரத்தர அடிப்படையில்,காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். 

« அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண் டாண்டு , மருத்துவ ஆய்வக நுட்புநர் பட்டயப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வெள்ளை அங்கியும், Internship காலத்தில் கருணை அடிப்படையில் ,பயிற்சிக் கால உதவி ஊக்கத் தொகையும் வழங்கிட வேண்டும். 

« ஒன்றிய அரசு, மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும். 

“நெக்‌ஸ்ட்”  தேர்வை கைவிட வேண்டும். 

நவீன அறிவியல் மருத்துவத்தை சீர்குலைப் பதை கைவிட வேண்டும். 

மருத்துவ மாணவர் விரோதப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். 

– டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *