உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நவராத்திரியின் போது சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி அனுப்பியதாக பெண் அளித்த புகாரில் உணவைக் கொண்டுவந்த நபர்மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் மத உணர்வைப் புண்படுத்துதல், மத விரோத நடவடிக்கை போன்ற கடுமையான பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்
உத்தரப் பிரதேசம் நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் காட்சிப்பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், இணைய வழி உணவு விநியோக செயலியில் தான் ஆர்டர் செய்த சைவ பிரியாணிக்கு பதிலாக அசைவ பிரியாணியை தவறுதலாக டெலிவரி செய்ததாக தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்ததாகக் கூறப் படும் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
காட்சிப் பதிவில் சாயா சர்மா என்ற பெண், நவராத்திரியின் போது, தான் மரக்கறி உணவை ஆர்டர் செய்த போதி லும் வேண்டுமென்றே தனக்கு சிக்கன் பிரியாணியை அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் இறைச்சி உணவை நவராத்திரி காரணமாக உண்ணாமல் தவிர்ப்பவள் எனவும் இருப்பினும் எனக்குக் கோழி பிரியாணியை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த உணவை முதலில் இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன்கள் சாப்பிட்ட பிறகே இறைச்சி இருந்தது தெரியவந்தது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண், “லக்னவி கபாப் பராத்தா” உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும், ஆனால் சிக்கன் பிரியாணியே வந்த தாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்க உண வகத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, அது மூடப்பட்டிருப்ப தாகவும், அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து உணவக ஊழியரைக் கைது செய்துள்ளனர்.
லக்னோவில் மிகவும் பிரபலமான இறைச்சி உணவகம் ‘‘லக்னவி கபாப் பரோட்டா” அதாவது லக்னோ இறைச்சி பரோட்டா என்பது அதன் பெயர். அங்கே விரதம் இருக்கும் பெண் ஏன் உணவு ஆர்டர் கொடுத்தார்?
அவர் அடிக்கடி அந்த உணவகத்தில் கோழி பிரியாணி மற்றும் பொரித்த கோழி உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர், இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பலர் பல்வேறு கருத்தை தெரிவித்துள்ளனர்.
நவராத்திரியின் போது ஹிந்துக்கள் என்று சொல்லப்படு பவர்கள் யாரும் மாமிச உணவு சாப்பிடுவதில்லையா?
தனது வசதிக்காக முட்டையை ‘சைவ’ உணவு என்று பெயர் கொடுத்து ‘லபக் லபக்’கென்று முழுங்கும் கூட்டமாயிற்றே!
காய்கறி பிரியாணிக்குப் பதில் கோழி பிரியாணி அனுப்பி விட்டார் என்பதற்காக கடைக்காரரைக் கைது செய்யும் அளவுக்கு அது என்ன மாபெரும் குற்றமா? தற்செய லாகக் கூட நடந்திருக்கலாம்.
காய்கறிகளுக்கும்கூட உயிர் உண்டு தானே! ஆக்சிஜனை அவை சுவாசிப்ப தில்லையா?
உணவில்கூட மத அரசியலா? யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து – மனிதனுக்கு மதம் பிடித்தாலோ அதைவிட மகா மகா ஆபத்தோ ஆபத்து!