அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த வேண்டும்

1 Min Read

வி.சி.க. நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 13- அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழா வாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது:
ஏப். 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத் துவ நாளாக கொண்டாடி வரு கிறோம். அந்த வகையில அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதி மொழியேற்க வேண்டும்.

சமத்துவ நாள்
இந்த நிகழ்ச்சியையே தேர்தல் வெற்றி விழா பேரணியாக, சமத்துவ நாள் அணிவகுப்பாக நடத்த வேண்டும். இது தொடர்பாக முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக் கும் வகையில் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்களை அதிக அளவில் பங்கேற்க செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏப்.14ஆம் தேதி பெங்களூருவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் நானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இருக்கிறேன். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் சமத்துவ வார நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவாரா பங்கேற்கிறார்.
ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா பகுதிகளிலும் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *