செய்திச்சுருக்கம்

Viduthalai
2 Min Read

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால் என்ன தண்டனை?
விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊக்க ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது?

மற்றவை
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கும் முறை. அதாவது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, கல்வியியல் என ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ப ஊக்க ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதி:
இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது. கடனளிப்பவரின் Risk Management-அய் ஆராய வேண்டும். முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும். கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட சாமியார்?
சர்பத் ஜிகாத் நாட்டில் பரவி வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். சில கம்பெனிகளின் சர்பத்தை நீங்கள் வாங்கினால், அந்த பணம் மசூதிகளை கட்ட பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தனது பதஞ்சலி சர்பத்தை வாங்கினால், அந்த பணம் குருகுலம் கட்ட உதவும் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவ முறை குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *