சேலம் அரசு அய்.டி.அய்.யில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சேலம், ஏப்.11 சேலம் அரசு அய்டிஅய்யில் வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு அய்டிஅய்யில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், வரும் 18-ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சிபெற்று பயன் பெறலாம்.

சோ்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச்சான் றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் அணுகி விவரம் பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது கூகுள் படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல, 16 மணி நேரம் கொண்ட காா் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகியகால பயிற்சி வழங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி 4 நாள்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூ. 1000 நிா்ணயிக்கப் பட்டுள்ளது. 18 வயது நிறைவுபெற்ற பயிற்சி பெற விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *