மாணவ – மாணவியர் பங்கேற்றனர்
சென்னை, ஏப்.10- ‘நாளை விடியும்’ இதழின் சார்பில் பெரியார் – அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி ஒன்றினை இவர்கள் இருவரின் நினைவு நாள்கள் வருகிற மாதமான கடந்த டிசம்பர் மாதம் பெரியார் – அம்பேத்கர் இருவரும் இணைந்து இருப்பது மாதிரியான ஓவியப் போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எல்லா வயதினருக்குமான பொதுப்போட்டி என்றுதான் அறிவித்த நிலையில், எதிர்பாராத வகையில் நான்காம் வகுப்பு மாணவர்களில் இருந்து நிறையப் பள்ளி மாணவர்களும் ஓவியங்களை அனுப்பி இருந்தனர். மொத்தம் 350 ஓவியங்கள் வந்திருந்தன. பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களைத் தனியாகப் பிரித்து பரிசுகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன.
பரிசினை வென்ற
அரசுப் பள்ளி மாணவர்கள்
பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பிரிவில் முதல் மூன்று பரிசுக்குரியவர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான கரிசனையில் தேர்வாளர் இவர்களைத் தெரிவு செய்து விட்டார் என யாரும் எண்ணிவிட இடமின்றி பெயர், முகவரி இல்லாமல் வெறும் ஓவியங்கள் மட்டுமே தேர்வாளருக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இரு பிரிவிலும் மொத்தம் வந்த 350 ஓவியங்களிலிருந்து சிறந்த 40, 40 ஓவியங்களைத் தெரிவு செய்து தேர்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
பொதுப் பிரிவில்
முதல் பரிசு: செ.சினேகா, சிவகங்கை.
இரண்டாம் பரிசு: ஹரிஷ், திருநெல்வேலி
மூன்றாம் பரிசு: லெ.பிரபா, பட்டுக்கோட்டை.
பத்தாம் வகுப்பு வரையிலான ஓவியங்களுக்கான பரிசுகள்
முதல் பரிசு: சு.புவனேசுவரன், நெல்லிக்குப்பம்.
இரண்டாம் பரிசு: சு.பி.அஸ்வத், பவானி.
மூன்றாம் பரிசு: க.ஜோஷ்வா, காஞ்சிபுரம்.
தன்னுடைய பணிச் சூழல் களுக்கிடையே சிறந்த ஓவியங்களைத் தெரிவு செய்து அனுப்பிய ஈரோடு தோழர் ஓவியர் மு.சுந்தரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.
போட்டிக்கான செய்தியைப் பகிர்ந்த முகநூல் நண்பர்கள், பகிரிக் குழுக்களின் (WhatsApp groups) ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் (group admins) அனைவருக்கும் நன்றி!
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்…
பொதுப் பிரிவில் முதலிடம் பெற்ற, கல்லூரி மாணவர் சினேகாவின் ஓவியத்தையும், பத்தாம் வகுப்புக்குக் கீழுள்ள பிரிவில் முதலிடம் பெற்ற சு.புவனேஸ்வரனின் ஓவியத்தையும் தரப்பட்டுள்ளன.
பணப்பரிசும் பரிசுக்கான நூல்களும் அனைவருக்கும் அனுப் பப்பட்டுவிட்டன.