ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு

1 Min Read

சிறிநகர், ஏப்.10 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று (9.4.2025) ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, “இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்” என்றார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதையடுத்து மெஹ்ராஜ் மாலிக் – பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்கள் மூலம் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று 3-ஆவது நாளாக அமளி ஏற்பட்டது. வக்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என ஆளும் தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் கோரினர். ஆனால் இதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அவர்கள் அவையின் மய்யப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *