திருத்தணி, ஏப்.9- திருத்தணியில் கீழே கிடந்த தங்கக் காப்பை புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனர் சகோதரிகள்.
திருத்தணி முருகன் கோயிலில் கீழே கிடந்த 2.5 பவுன் தங்கக் காப்பை மீட்டு புறக்காவல் மய்யத்தில் சகோதரிகள் ஒப்படைத்தனா். சென்னை, பெரம்பூா் ஜவகா் நகரைச் சோ்ந்தவா் சாய் முருகன் மகன் கவுதம் (33). அய்டி நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா் 7.4.2025 அன்று தனது மனைவியுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று பிறகு படிகள் வழியாக இறங்கிய போது, கையில் போட்டிருந்த 2.5 பவுன் தங்கக் காப்பு மாயமானது தெரிய வந்தது.
இதற்குள் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த சிறுமிகள் (அக்கா, தங்கை) பவித்ரா(12), ரேணுகா(7) ஆகியோர் கீழே இருந்த தங்கக் காப்பை மீட்டு மலைக்கோயிலில் உள்ள புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து காவல் துறையினர் தங்கக் காப்பை தவற விட்ட, கவுதமிடம் காப்பை ஒப்படைத்தார். தங்கக் காப்பை மீட்டு கொடுத்த சிறுமிகளுக்கு கவுதம் அவரது மனைவி நன்றி கூறினா். நகையை மீட்டு கொடுத்த சகோதரிகளை காவலர்கள் பாராட்டினா்.