அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

viduthalai
3 Min Read

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் – பெல்ஜியம் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலால் பிடிபட்டனர்

சென்னை, ஏப்.9- சென்னை அசோக்நகரில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு அலாரம் செல்போனில் எச்சரித்ததால் வீட்டின் உரிமையாளர் பெல்ஜியம் நாட்டில் இருந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து கையும், களவுமாக சிக்கினார்கள்.

சென்னை அசோக்நகர் சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட்ரமணன் (வயது 56). இவருடைய மனைவி கலா. இவர்களது மகள் பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக வெங் கட்ரமணன் தனது மனைவி கலாவுடன் கடந்த 4ஆம் தேதி பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார். வெங்கட்ரமணன் தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போன் மூலம் எங்கும் இருந்தும் பார்க்கும் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி வருகிறார்

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் மகள் வீட்டில் தங்கி இருந்த வெங்கட்ரமணனின் செல்போனில் 6.9.2025 அன்று அதிகாலை 1.30 மணியளவில் அபாய எச்சரிக்கை ஒலித்தது. அவர் அதிர்ச்சி அடைந்து, செல்போன் மூலம் தனது வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் அவரது வீட்டுக்குள் 2 திருடர்கள் நுழைந்திருப்பது தெரியவந்தது

வெங்கட்ரமணன் உடனடியாக பெல்ஜியம் நாட்டில் இருந்து சென்னையில் தன் வீட்டின் அருகே வசிக்கும் வெங்கட சுப்பிரமணியம் என்பவரை அலைபேசியில் அழைத்து,தனது வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதுபோல் தெரிகிறது.நீங்கள் உடனே சென்று பாருங்கள்.என்று கூறியுள்ளார். அதன்பேரில் வெங்கட சுப்பிரமணியம் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது வெங்கட்ரமணன் வீட்டுக்குள் சிலரின் நடமாட்டம் இருப்பதை அவர் உறுதி செய்தார். இதையடுத்து அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித் தார். மேலும் வெங்கட்ரமண னும் பெல்ஜியம் நாட்டில் இருந்து காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது பூட்டிய வீட் டுக்குள் திருடர்கள் புகுந்து விட்ட தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் கிடைத்த மறுகணமே இரவு ரோந்து பணியில் இருந்த உதவி ஆணையர் சுரேந்திரன், வடபழனி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வெங்கட்ர மணனின் வீட்டுக்கு விரைந்து வந்தனர். காவலர்கள் வருவதை கண்டு சுதாரித்துக் கொண்டு 2 திருடர்களும் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றனர். அப்போது அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து கையும், களவுமாக கைது செய்தனர். சுவர் ஏறி தப்ப முயன்றபோது ஆரிப் பிலிப் என்பவருக்கு தவறி விழுந்து காயம் ஏற்பட்டது.

அவர்கள் 2 பேரும் வெங்கட்ரமணன் வீட்டில் 6 பவுன் நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள், இந்திய மற்றும் அமெரிக்க பணம், 2 அய்ம்பொன் சிலைகளை திருடி வைத்திருந்தனர். அதனை காவல் துறையினர் கைப்பற்றி 2 பேரையும் அசோக்நகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பல்லாவரம் அலகானந்தபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (65), திருப்பத்தூர் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பதும் தெரியவந்தது.

வீட்டில் கைவரிசை காட்டுவதற்கு முன்பு ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி உள் ளனர்.

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் வடமாநில கொள்ளையர்களுக்கு சவால் விடும் வகையில் இவர்கள் 2 பேரும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கமலக்கண்ணன் மீது 70 குற்ற வழக்குகளும், ஆரி பிலிப் மீது 20 குற்ற வழக்குகளும் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று கொள்ளையர்களை கைது செய்த காவலர்களை காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *