தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் தேசிய மாநாடு கட்சியினருக்கு மெகபூபா முப்தி அறிவுரை

1 Min Read

சிறீநகர், ஏப்.8 வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டப் பேரவையில் கொண்டுவரப் பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,’வக்பு சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானத்தை பேரவைத் தலைவர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.பா.ஜனதாவின் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலுக்கு அரசு முற்றிலும் அடிபணிந்து அவர்களை திருப்திப் படுத்த இழிவாக முயற்சிப்பது போல் தெரிகிறது’

வக்பு மசோதாவை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டை பார்த்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்க வேண்டும் எனக்கூறியுள்ள மெகபூபா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே பிராந்தியமான காஷ்மீரில், இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட அரசுக்கு தைரியம் இல்லாதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதைப்போல தேசிய மாநாடு கட்சி எம்.எல்.ஏ. அல்தாப் கலூவும்தமிழ் நாட்டை சுட்டிக்காட்டி சட்டப் பேர வைத் தலைவரை குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‘6 சதவீத முஸ்லிம்களை கொண்ட தமிழ்நாடு சட்ட பேரவையில் வக்பு மசோ தாவுக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் சட்டப் பேரவை யில் அது குறித்து விவாதிக்க முடியா தது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *