கேரளாவில் பரபரப்பு! மனிதனை நாயைப் போல நடக்க வைத்த முதலாளித்துவம்

viduthalai
1 Min Read

கொச்சி, ஏப்.8- கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் வீட்டு உபயோக பொருட்களை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்து வருகின்றனர்.

அவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், அந்த இலக்கை அடையவில்லை என தெரிகிறது.
இதனால் இலக்கை அடைய தவறியதற்காக ஊழியர்களை நிர்வாகத்தினர் முட்டி போட வைத்து கழுத்தில் சங்கிலி கட்டி நாய் போல நடக்க வைத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஊழியரை ஒருவர் நாய் போல நடத்திசெல்வதும், மற்றொருவர் அவரது காதுகளில் சத்தம் போடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *