கேரளாவில் பரபரப்பு! மனிதனை நாயைப் போல நடக்க வைத்த முதலாளித்துவம்

1 Min Read

கொச்சி, ஏப்.8- கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் வீட்டு உபயோக பொருட்களை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்து வருகின்றனர்.

அவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், அந்த இலக்கை அடையவில்லை என தெரிகிறது.
இதனால் இலக்கை அடைய தவறியதற்காக ஊழியர்களை நிர்வாகத்தினர் முட்டி போட வைத்து கழுத்தில் சங்கிலி கட்டி நாய் போல நடக்க வைத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஊழியரை ஒருவர் நாய் போல நடத்திசெல்வதும், மற்றொருவர் அவரது காதுகளில் சத்தம் போடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *