காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்தை வலியுறுத்த வேண்டும்

Viduthalai
2 Min Read

ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரை முருகன் நேரில் வலியுறுத்தல்

அரசியல்

புதுடில்லி, ஜூலை 6 தமிழ் நாட் டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்து விடுமாறு கருநாட கத்தை அறிவுறுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் வலியுறுத் தினார். காவிரி நதிநீர் விடயமாக ஒன்றிய அரசை வலி யுறுத்துவதற்காக தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி தொடர்பான சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து துரைமுருகன் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு ஜூலை 3-ஆம் தேதி வரை மொத்தம் 12.213 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகா தந்து இருக்க வேண்டும். ஆனால் அதில் 2.993 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைத்து இருக்கிறது. மீதமுள்ள 9.220 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் தரவில்லை. இந்த நிலை தொடர்ந் தால் காவிரி டெல்டாவில் பயிர்கள் எல்லாம் வாடிவிடும். ஆகையால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக் கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். எனவே, இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கி, கருநாடக அரசிடம் பேசி தண்ணீர் விடுவதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் பேசி இருக் கிறேன். அவரும் உடனடியாக துறையின் இணைச்செயலாளரை கூப்பிட்டு இது தொடர்பாக ஆலோ சித்து, ஆணையத்திடம் பேசுவதற் கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இனி என்ன நடக்கிறது? என்பதை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப்பெரியாற்றில் வள்ளக்கடவு சாலை அமைப்பு பணிகள் தொடர்பான கேள்விக்கு, “சாலை போடுவதற்கு எல்லா வசதி களும் செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்களே தவிர, இன்னும் செய்யவில்லை. செய்வார்கள் என நம்புகிறேன். செய்தால் மிகுந்த நன்றியோடு பணிகளை தொடரு வோம்” என்றார். இதைப்போல தென்பெண்ணையாறு விவகாரத் தில் தீர்ப்பாயம் அமைத்தல் தொடர்பான கேள்விக்கு, இந்த விடயத்தில் இனி அவகாசம் கொடுக் கக்கூடாது என வலியுறுத்தியிருப்ப தாக தெரிவித்தார். 

பின்னர் அமைச்சர் துரை முருகன், நாடாளுமன்ற விவகா ரங்கள் துறைஅமைச்சர் பிரகலாத் ஜோஷியையும் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *