ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி மறைவு

1 Min Read

செட்டிநாட்டு அரசர் குடும்பம் மற்றும் ராஜா சர் முத்தையா, டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி ஆகியோரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவரும், இந்தியன் வங்கியின் மேனாள் மேலாளருமான ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி (வயது 91) சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள தமது இல்லத்தில் நேற்று (4.4.2025) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நினைவாற்றல், பல்வேறு பெருமக்களின் நன்மதிப்பு, பரந்து விரிந்த மேலாண்மை நிர்வாகம், கூட்டுக் குடும்ப வாழ்வின் முன்னோடி என முன்மாதிரி மனிதராக வாழ்ந்தவர். இவருக்கு மனைவி ஆர்எம்.மீனாட்சி, மகன்கள் டாக்டர் ஆர்எம்.ஆறுமுகம், ஆர்எம்.இராஜேந்திரன், ஆர்எம்.வெங்கடாசலம், மகள் வசந்தா நடராஜன் உள்ளனர்.
நேற்று (4.4.2025) திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மறைவுற்ற ஏஆர்.இராமசாமி உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இன்று (5.4.2025) காலை அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *